இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முன்னாள் சிறை அதிகாரி கைது

இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி இம்புலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மஹர சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரியொருவர் ருவன்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த சிறைச்சாலை அதிகாரியிடமிருந்து 5,500 மில்லிகிராம் ஹெரோயின், 600 மில்லி கிராம் ஐஸ், கஞ்சா, பல எடை கருவிகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க