புதியவைவணிக செய்திகள்

ஜனாதிபதி நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

சகல ஓய்வூதியதாரர்களுக்குமான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்குவது குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாய் வழங்குவதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அதற்கான கொடுப்பனவு வழங்கப்படாததால் எதிர்வரும் காலங்களில் குறித்த 3000 ரூபாய் கொடுப்பனவையும் மாதாந்த ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க