உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் சகாக்கள் கைது!

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு தலைமை வகித்த தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாசீமின் சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரவபொத்தானை பகுதியில் காவல் துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்றிரவு தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதன்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

21/4 தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானுடன் இணைந்து பல தடவைகள் இவர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர் என்றும், தாக்குதலுடன் இவர்களுக்கும் நேரடி தொடர்பிருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

 

கருத்து தெரிவிக்க