வெளிநாட்டு செய்திகள்

பெண்களால் சபரிமலையில் மீண்டும் பரபரப்பு

சபரிமலை கோவிலுக்குள்  நுழைய  இரண்டு பெண்கள் முற்பட்டதையடுத்து அங்கு மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
அத்துடன், கோவிலுக்குள் பெண்கள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் பிரச்சினை விஸ்வரூபமெடுத்தது. சில நாட்களின் பின்னர் பதற்றம் தணிந்தது.
இந்நிலையிலேயே சபரிமலை கோவிலுக்கு  நுழைய இரண்டு பெண்கள் முயற்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்புகள் வலுத்ததையடுத்து முயற்சியை அவர்கள் கைவிட்டுள்ளனர். எனினும், அங்கு
மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

கருத்து தெரிவிக்க