இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையின் கல்வி நிலை தொடர்பில் பிரதமர் பணிப்புரை

இலங்கையின் கல்வி நிலை குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதோடு கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு இதுவரை காலமும் வெளியிடப்படாத அனைத்து பரீட்சைகளின் பெறுபேறுகளையும் துரிதமாக வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க