உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி தொடர்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம்- ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தொடர்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானங்களை மேற்கொள்வார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இருவர் தொடர்பிலும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் ஜனாதிபதியை சந்தித்து உரையாடவுள்ளனர்.

இதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் இருவர் தொடர்பிலும் தீர்மானங்களை எடுப்பார் என்று துமிந்த திஸாநாயக்க நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விரைவில் தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க