இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

2024ற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் மேலதிக பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், செயலமர்வுகள் என்பன எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஊகத்தின் அடிப்படையிலான வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிட்டு வெளியிடுவதற்கும் சுவரொட்டிகள், பதாகைகள் போன்றவற்றை வெளியிடவும் தடைவிதித்துள்ளதாக தெரிவித்துள்ளது .

கருத்து தெரிவிக்க