உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தொடர்பான பேஸ்புக் பதிவு. மாணவனுக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி தொடர்பில் பொய்யான தகவலை பேஸ்புக்கின் ஊடாக பகிர்ந்ததாக கூறப்படும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவனை மே 23 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சீனாவுக்கு பயணித்த வானூர்தி விபத்துக்;குள்ளானதாக இவர் பதிவை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும் மற்றும் ஒருவர் அனுப்பிய தகவலையே தமது கட்சிக்காரர் வேறு ஒருவருக்கு பகிர்ந்துள்ளதாக பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிவான், தற்போதைய சூழ்நிலையில் பொதுமகன் ஒருவர் தாம் எதனை மற்றவருக்கு பகிர்கிறோம் என்பது தொடர்பி;ல் அவதானமாக செயற்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க