புதியவைவணிக செய்திகள்

பொதுமக்களின் முறைப்பாட்டால் கற்பிட்டி எரிபொருள் நிலையத்திற்கு சீல் வைப்பு

கற்பிட்டி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விநியோகிக்கப்படுவதாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை மேற்பார்வை செய்ததுடன் அங்கிருந்து எரிபொருள் மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

அதற்கிணங்க நேற்று (செப்டம்பர் 01) குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க