இதழ்கள்உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்.  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

‘நிரபராதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்’ என்று எழுதப்பட்ட பதாகையைத் தாங்கியவாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபுட்டனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகம் கடந்த 3ஆம் திகதி பாதுகாப்பு தரப்பினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறை மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் இருந்தன எனக் குற்றம்சாட்டப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க