இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

பரீட்சை இரத்து செய்யப்படமாட்டாது! கல்வி அமைச்சு திட்டவட்டம்

இரண்டாம் தவணை பரீட்சை எக்காரணம்கொண்டும் இரத்துசெய்யப்படமாட்டாது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளபோதிலும் மாணவர்களின் வருகை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை.

தவணைக்குரிய கல்வி நடவடிக்கைகள் முழுமையாக பூர்த்தியாகததால் இரண்டாம் தவணை பரீட்சையை இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சரிடம் சில தரப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இலங்கை ஆசிரியர் சங்கமும் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தது.

இந்நிலையிலேயே கல்வி அமைச்சர் அகில விராஜ் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார். அத்துடன், அடுத்த இரண்டு வார காலப்பகுதிக்குள் மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

கருத்து தெரிவிக்க