இதழ்கள்உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நாட்டில் இன்றும் தேடுதல் வேட்டை – வர்த்தக நிலையங்களும் சல்லடை

நாட்டில் இன்றைய தினமும் சில பகுதிகளில் முப்படையினரும், பொலிஸாரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.  அத்துடன், சந்தேகத்துக்கிடமான வர்த்தக நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

வெடிபொருட்கள், வாள்கள் மற்றும் படையினரின் சீருடைகளுக்கு நிகரான ஆடைகள் போன்றவற்றை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு கால அவகாசம் வழங்கியிருந்தது.

இக்காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையிலேயே, ஏதேனும் சட்டவிரோதப் பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, வன்முறை சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பான காணொளிகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க திணைக்களம், ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க