உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் உளவு அதிகாரி

பாகிஸ்தானில் கடந்த 2019 -2021ம் ஆண்டுகளில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பில் லெப்டினட் ஜெனரலாக பதவி வகித்த பையஸ் ஹமீத் தன் பதவி காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாகிஸ்தான் அரசின் வீடு வசதி திட்டத்தில் ஊழல் செய்ததாக 2023ம் ஆண்டு புகார் கூறப்பட்டு இராணுவ சட்ட விதிகளின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க தற்போது ஊழல் வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அதிகாரியான பையஸ் ஹமீத் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க