இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்துவோரின் தொகை அதிகரிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச,பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரதன தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதோடு இம்மாதம் ஓகஸ்ட் 14ம் திகதி வரை ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திட முடியுமென அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க