இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்தவர்கள் கைது

நேற்று (ஜூலை 31) குடிவரவு நிபந்தனைகளை மீறி வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 05 ஆண்கள், ஒரு பெண் உள்ளடங்களாக ஆறு சீன பிரஜைகள் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 20 வயதுக்கும் 48 வயதுக்கும் உட்பட்டவர்களென தெரியவந்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை தற்போது பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க