இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் தொடர்பாக அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு
வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க போலி விளம்பரங்களில் சிக்கிக்கொள்ளாமல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பான தகவல்களின்படி செயற்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான அனைத்து விண்ணப்பங்களையும் ஆகஸ்ட் 5ம் திகதி நள்ளிரவுக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க