புதியவைவெளிநாட்டு செய்திகள்

கேரளாவில் இடம்பெற்ற பாரிய நிலச்சரிவு!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வெவ்வேறு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறித்த நிலச்சரிவுகள் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மற்றும் மேப்பாடி எனும் பகுதியிலும் இடம்பெற்றுள்ளதாகவும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாதுகாப்புப் படையினரும், நிவாரணக் குழுக்களும் அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க