இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் ஆரம்பம்

இன்று (ஜூலை 23) முதல் ஜூலை 26ம் திகதி வரை பாராளுமன்ற அமர்வானது பிரதி சபாநாயகர் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இன்று (ஜூலை 23) சிவில் நடைமுறைச்சட்டத் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் கீழான இரண்டு உத்தரவுகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுமென பாராளுமன்ற தகவல் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க