புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தியாவில் பரவும் நிபா வைரஸ்!

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸினால் 60 பேர் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைரஸ், பன்றிகள் மற்றும் பழ வெளவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக் கூடியது எனவும்,அசுத்தமான உணவு மற்றும் நோய்த் தாக்கத்துக்கு உள்ளான நபருடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது பரவுகிறது எனவும் அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் முகக்கவசம் அணியுமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க