உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஏமனில் செங்கடல் வழியாக சென்ற கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடல் வழியாக சென்ற லைபீரியா மற்றும் பனாமா நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக இங்கிலாந்து கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதற்கிணங்க குறித்த தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் மீண்டும் பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக
தெரியவந்துள்ளது.

மேலும் இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றமையால் இவ்வாறு செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் தொடர் தாக்குதல் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க