இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

05 வகையான உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன

இன்று (ஜூலை 17) முதல் அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலையை குறைக்கவுள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க உரத்தின் விலையை 1500 ரூபாவினால் 2000 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

கறுவா, தேயிலை, தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர அரச உரக் கம்பனிக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உர விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க