இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு ஜூலை மாத இறுதியில் வெளியிடுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டால் செப்டம்பர் 17ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குமிடையே தேர்தல் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரத்நாயக்க, அரசாங்க அச்சகர், பொலிஸ் மா அதிபர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க