இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தொழிலதிபர் விரஞ்சித் தம்புகலவின் வங்கி கணக்கு குறித்து ஆய்வு

நேற்று (ஜூலை 10) தொழிலதிபர் திரு.விரஞ்சித் தம்புகலவின் வங்கிக் கணக்கில் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 4,757 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

அதற்கிணங்க நேற்றைய தினம் தொழிலதிபர் திரு.விரஞ்சித் தம்புகலவிடம் நடத்தப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உண்மைகள் குறித்து நீதிமன்றில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் முன்வைத்துள்ளார்.

அத்தோடு நபர் ஒருவரிடமிருந்து 70 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக வர்த்தகர் திரு.விரஞ்சித் தம்புகலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா முன்னிலையில் நேற்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கருத்து தெரிவிக்க