உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நிலை

கடந்த 5ம் திகதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்,புட்ச் வில்மோர் எனும் விண்வெளி வீரருடன் விண்வெளிக்கு சென்றிருந்ததோடு கடந்த 7ம் திகதி இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்திருந்தனர்.

அதற்கிணங்க விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்ட இவர்கள் 13ம் திகதி பூமிக்கு திரும்ப திட்டமிட்ட போது இவர்கள் பயணித்த விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவினால் தற்போது பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க