இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவன் கைது

17 வயதுடைய பாடசாலை மாணவனொருவன் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் தம்புத்தேகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் தம்புத்தேகம பேருந்து நிலையத்துக்கருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய போது கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த மாணவனிடம் மேற்கொள்ளப்பட்ப விசாரணையின் போது மாணவனின் வீட்டில் ஏராளமான போலி நாணயத்தாள் அச்சிடும் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க