உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

‘ உடனுக்குடன் சீனாவுக்கு பறக்கும் இலங்கைத் தகவல்கள்’

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படை தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபருடன் நேற்றிரவு தொலைபேசியூடாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

அத்துடன், தனது செயலாளர் ஊடாக நாட்டில் நடக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கேட்டறிந்து வருகிறார்.

குருணாகலை மாவட்டத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து, அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தொலைபேசியூடாக ஜனாதிபதிக்கு விபரித்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று சீனா நோக்கி புறப்பட்டார். எதிர்வரும் வியாழக்கிழமையே அவர் நாடு திரும்பவுள்ளார்.

 

 

கருத்து தெரிவிக்க