உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜூலை 2 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அமர்வு: பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு

ஜூலை 2 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளையில் கீழ் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க