உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

நாடு ஸ்திரத்தன்மையை இழந்து விடும்- பிரதமர் எச்சரிக்கை

நாட்டில் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற்றால், நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வன்முறைகளை தொடர்ந்தால், இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் படையினருக்கு பாதகமாக அமையக்கூடும்.

இந்தநிலையில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக படையினர் கடும் நடவடிக்கையை எடுப்பர் என்;றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க