இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

இன்று (ஜூன் 18) இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச்சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதற்கிணங்க இலங்கை தொலைத்தொடர்பு திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனவும் அவை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி திருத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச்சட்ட தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சில சரத்துக்கள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க