சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கைக்கான சுற்றுலா தொடர்பில் சந்தேகம்- பங்களாதேஸ் கிரிக்கட்

எதிர்வரும் ஜூலையில் இலங்கைக்கான சுற்றுலாவை மேற்கொள்ளமுடியாது போகும் என்று பங்களாதேஸ் கிரிக்கட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மீண்டு;ம் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையை அடுத்தே இந்த கருத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இலங்கை அதிகாரிகள் பாதுகாப்பு உறுதிப்பாட்டை தந்தால், பின்னர் யோசிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே பங்களாதேஸ் அணி, நியூஸிலாந்துக்கு சென்றிருந்த வேளையில் அவர்கள் தங்கியிருந்த விருந்தகத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2019 மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் 51பேர் வரை கொல்லப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க