இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

17 வயது மாணவன் தாக்கியதில் 15 வயது மாணவன் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை பத்தேவெல வீதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனை அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிப்பிக்குளம் பகுதியில் வசிக்கும் 17 வயது மாணவன் தாக்கியதில் 15 வயதுடைய மாணவன் உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகி அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தமை தொடர்பிலான செய்தியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறே மோதலுக்கு காரணமென விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க