உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் பொது இடங்களில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

அதனடிப்படையில் கடந்த ஜூன் 1ம் திகதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் அக்ரோன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 26 பேர் காயமடைந்ததையொட்டி அப்பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கெல்லி அவென்யூ மற்றும் 8வது அவென்யூவிற்கு அருகிலுள்ள தெருவில் சென்றவர்கள் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்தோடு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க