இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டவிரோத முறையில் சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் சிகரெட்டுகளை கொண்டு வந்த 31 வயதான இந்திய பிரஜை ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க