உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்றம் இன்று கலைப்பு

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்தார்.

அதற்கிணங்க பிரித்தானிய நாடாளுமன்றமானது இன்று (மே 30) உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதுடன் பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க