இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெள்ள அபாய எச்சரிக்கை

அத்தனகலு ஓயா வடிநிலத்திற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை களுகங்கையில் குடா கங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கையானது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

கருத்து தெரிவிக்க