இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது!

போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான உமேஷ் பால ரவீந்திரன் இந்திய மத்திய குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2010ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டவர், 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் அரசாங்க ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்து கர்நாடகாவில் உள்ள வீட்டுமனை வளாகத்தில் தங்கியிருந்த போது இக்குற்றத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரால் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரங்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் கைத்துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் இலங்கையர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும் அவர்கள் விமான நிலையத்தில் இருந்தபோது ​​பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க