உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

தீவிரவாதத்தை அடக்குவதில் சர்வதேசமும் பங்கேற்றது- மங்கள சமரவீர

தீவிரவாத பயங்கரவாதத்தை அடிப்படையாகக்கொண்டு நாட்டில் அரசியல் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மங்கள சமரவீர மத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது சுமத்தியுள்ளார்.

தீவிரவாத பயங்கரவாதம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு இலங்கையின் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் மாத்திரம் அல்ல. சர்வதேசமும் இதற்கு காரணமாக இருந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றபோது பாற்சோறு சாப்பிட்ட சில அரசியல்வாதிகள், மரணமான மக்களின் உடல்களின் மீது நின்று கொண்டு தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாகவும் மங்கள சமரவீர குற்றம் சுமத்தினார்.

கருத்து தெரிவிக்க