உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு

தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று (மே 24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவானது இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்டுள்ளதோடு இந்த நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க