புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ரசிகர்களை மனவருத்தத்தில் ஆழ்த்திய பெங்களூர் அணி

இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17வது ஐ.பி.எல் தொடரில் நேற்று (மே 22) ராஜஸ்தான் ரோயல் மற்றும் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ்கும் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் முடிவில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூர் அணி சார்பில் சிராஜ் 2 விக்கெட்டுகளும், பெர்குசன், கரண் ஷர்மா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதற்கிணங்க பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேறியது.நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி இன்னும் ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க