இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவரென அறியப்படுவதோடு குறித்த சம்பவம் இறந்த நபருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாகியதனால் இந்த கொலை சம்பவித்துள்ளது.

மேலும் சந்தேக நபரென அடையாளங்காணப்பட்டவரும் காயமடைந்துள்ளதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இது குறித்த மேலதிக விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க