உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நடுவானில் விமான அதிர்வு ஒருவர் பலி

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக பயணியொருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-312 ரக விமானம் நேற்று ( மே 21 ) லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த
விமானத்தில் 211 பயணிகள், 18 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென நடுவானில் ஏற்பட்ட கடும் அதிர்வின் காரணமாக பாங்காங் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு விமானி அனுமதி கோரியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாங்காங் விமான நிலையத்தில் அவசரமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று 3.34 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க