உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

ஸஹ்ரானின் அமைப்பு தடை தொடர்பான வர்த்தமானி இன்னும் வெளியிடப்படவில்லை.

“ஸஹ்ரானின், தேசிய தௌஹீத் ஜமா” மற்றும் “ஜமாத்தி மில்லாது இப்ராஹிம்” ஆகியவை மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான வர்த்தமானி இன்னும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்படவில்லை.

இதனை அரசாங்கத்தின் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் “தேசிய தௌஹீத் ஜமா” மற்றும் “ஜமாத்தி மில்லாது இப்ராஹிம்”; ஆகியவை தடைசெய்யப்படுவதாக கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி அறிவி;த்திருந்தார்.

எனினும் இது தொடர்பான நகல் ஆவணத்தை இன்னும் சட்டமா அதிபர் திணைக்களம் தமக்கு அனுப்பவில்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

எனினும் நகல் ஆவணத்தை தாம் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவிட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க