இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பல்கலைக்கழக மாணவிக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்கள் கைது

பல்கலைக்கழக மாணவிக்கு இடையூறு ஏற்படுத்திய 06 இளைஞர்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற 06 இளைஞர்கள் அதே ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவிக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த பல்கலைக்கழக மாணவி தன் பெற்றோருக்கு அறிவித்ததையொட்டி இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டிற்கிணங்க சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவிக்கு இடையூறு ஏற்படுத்திய சந்தேகநபர்களிடம் இருந்து ஆரம்பகட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்களை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் இவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகை வந்துள்ளதாகவும் கொழும்பில் வசிக்கும் 20 முதல் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க