இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி இன்று இந்தோனேசியா விஜயம்

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில்
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னைய தினம் இந்தோனேசியா சென்றுள்ளார்.
இம்முறை நடைபெறும்
10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை
‘கூட்டு செழுமைக்கான நீர்’ என்ற தொனிப்பொருளில்
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது.
இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் மே 20 ஆம் திகதி மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் ஊடாக
இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டின் பல உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க