உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

வத்தளை, ஹ_னுப்பிட்டிய துப்பாக்கி சூடு: விசாரணைகள் ஆரம்பம்.

கடற்படையினர் நிறுத்துமாறு கோரியும் அவர்களின் கட்டளை மீறிச்சென்ற வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஓட்டுநர் உயிழந்த சம்பவம்; தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவர் யார் என்ற விடயத்தை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை.

இந்த துப்பாக்;கி பிரயோகம் நேற்று இரவு வத்தளை,ஹ_னுப்பிட்டிய சந்தியில் இடம்பெற்றுள்ளது.

வேகமாக செலுத்திச்செல்லப்பட்ட வாகனத்தை நிறுத்துமாறு கடற்படையினர் கோரினர்.

எனினும் குறித்த வாகன ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இதன்போதே அதன் மீது சந்தேகத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காயமடைந்த வாகன ஓட்டுநர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கருத்து தெரிவிக்க