உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

மே13இல் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை- மஹிந்த ராஜபக்ச

மே 13ஆம் திகதியன்று தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு பிரிவினருக்கு இது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் அவர்கள் தமது பிள்ளைகளை இன்னும் பாடசாலைகளுக்கு அனுப்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கிடையிலான பிரச்சினையை ஒதுக்கிவைக்கவேண்டும் என்றும் மஹிந்த கேட்டுக்கொண்டார்.
.

கருத்து தெரிவிக்க