இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அம்பாறையில் திடீரென அதிகரித்துள்ள முதலைகளின் நடமாட்டம்! அச்சத்தில் மக்கள்

அம்பாறையில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒலுவில், நிந்தவூர், மருதமுனை, பெரிய நீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு மற்றும் நாவிதன்வெளி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன.

வயல் நிலங்கள், களப்புப் பகுதிகள் மற்றும் கால்வாய்களை அண்டிய பகுதிகளில் இருந்து முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அவ்வாறான பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் எச்சரிக்கை பலகை எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை என அங்குள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க