இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்!

வாகன இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடை, அடுத்த ஆண்டு முழுமையாக நீக்கப்படலாமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிகரிக்கும் டொலர் கையிருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதற்கான விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே அதன் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க