இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இன்றைய தினம் வவுனியா சிறைச்சாலையில் 10 கைதிகள் விடுதலை!!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக் கைதிகள் இன்று (13.04) காலை விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் , சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க