இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

வாழைசேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிண்ணையடி பகுதியை சேர்ந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின்கம்பியை நீர் இறைக்கும் இயந்திரத்துடன் பொருத்த முயற்சித்த போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க